ஒவ்வொரு உம்மத்தினருக்கும் அல்லாஹ் ஒரு நபியை அனுப்ப்பி தான் அவர்களுக்கு நேர்வழியை காண்பிக்க வைக்கின்றான். வேதத்தை மட்டும் கொடுத்து விட்டு நீங்கள் படித்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவதில்லை. அந்த வேதத்தையே நபியின் மூலம் தான் விளக்கத்துடன் அருள்கின்றான்.
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ
அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பி வைத்தோம். (2:151)

